Posts

Showing posts from November, 2022

சூத்திரமயமாகும் தலித் தலைமை

Image
சிதம்பரத்தில் சுவாமி சகஜானந்தர் அவர்களால் பட்டியல் இன மாணவர்களின் கல்விக்காக தொடங்கட்டபட்ட நந்தனார் பள்ளியின் முன்னாள் மாணவர்களை பொன்னாங்கண்ணிமேடு கிராமத்தை சேர்ந்த ஜெயராமன் என்பவர் முயற்சியால் ஒருங்கிணைத்து "நந்தனார் பள்ளி பழைய மாணவர்கள்" என்ற அமைப்பை தொடங்கி நடத்தி வந்தார். இந்த அமைப்பில் பெரும்பாலும் சிதம்பரம் வட்டார பகுதி பட்டதாரிகள் இருந்தனர். நந்தனார் பள்ளி பழைய மாணவர்கள் அமைப்பு சுவாமி சகஜானந்தர் பெயரில் I.T.I மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி வேண்டும் என்கிற கோரிக்கைகளை எண்பதுகளின் தொடக்கத்தில் அரசுக்கு முன்வைத்தது. அதனை தொடர்ந்து மார்ச் 1983 ஆம் ஆண்டு சிதம்பரத்தில் நந்தனார் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் எஸ். சுவாமிநாத அய்யர் தலைமையில் விவேகானந்த ஆங்கில பள்ளியில் சுவாமி சகஜானந்தர் பெயரில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை இந்த அமைப்பு முன்வைத்து. இப்போராட்டத்தில் முதல் படியாக நந்தனார் பள்ளியின் வளாகத்தில் அரசு I.T.I கல்லூரியை அரசு நிறுவியது இந்தமைப்பிற்கு கிடைத்த வெற்றியாகும். நந்தனார் பள்ளி பழைய மாணவர்கள் அமைப்பு தொடர்ந்து அரசுக்கு கொடுத...