வாத்தியார் வேலு 1916 -1982
வாத்தியார் வேலு 1916 -1982 அருள் முத்துக்குமரன் தஞ்சை பகுதியை பற்றி பேசும்போதெல்லாம் கூலி உயர்வு சார்ந்த பிரச்சனைகளை மட்டுமே பேசுகிறார்கள். ஆனால் அந்த பகுதியில் நடந்த சாதி ரீதியான வன்கொடுமைகள் குறித்து போதிய கவனம் செலுத்துவதில்லை. அதனாலேயே அங்கு செயல்பட்ட தலித் ஆளுமைகள் பற்றிய கவனம் பெறாமலே போகிறார்கள். அந்த வகையில் மயிலாடுதுறை பகுதியில் ஆசிரியர் வேலு என்பவர் பட்டியல் சமுக மக்களின் உரிமைக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வந்தது யாரும் அறியாமல் இருந்தது. சுதந்திரத்துக்கு முன்பே திருவள்ளுவர் பெயரில் மாணவர் விடுதியை நடத்தி மயிலாடுதுறை வட்டார மக்களுக்கு கல்வி போதித்து வந்தார். அதன் பின்பு பெடரேஷன் அமைப்பில் தொண்டு வீராசாமி, நடுதிட்டு கூத்தரசன் கே.பி.எஸ்.மணி போன்றவர்களுடன் இணைந்து இழி தொழில் ஒழிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து மக்கள் பணியில் இருந்ததால் தான் பணியாற்றிய ஆசிரியர் பணியை துறந்து சென்னை மாகாணத்தின் முதல் சட்டமன்ற தேர்தலில் மயி...