Posts

Showing posts from July, 2024

வாத்தியார் வேலு 1916 -1982

 வாத்தியார் வேலு 1916 -1982                                       அருள் முத்துக்குமரன்  தஞ்சை பகுதியை பற்றி பேசும்போதெல்லாம் கூலி உயர்வு சார்ந்த பிரச்சனைகளை மட்டுமே பேசுகிறார்கள். ஆனால் அந்த பகுதியில் நடந்த சாதி ரீதியான வன்கொடுமைகள் குறித்து போதிய கவனம் செலுத்துவதில்லை. அதனாலேயே அங்கு செயல்பட்ட தலித் ஆளுமைகள் பற்றிய கவனம் பெறாமலே போகிறார்கள். அந்த வகையில் மயிலாடுதுறை பகுதியில் ஆசிரியர் வேலு என்பவர் பட்டியல் சமுக மக்களின் உரிமைக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வந்தது யாரும் அறியாமல் இருந்தது. சுதந்திரத்துக்கு முன்பே திருவள்ளுவர் பெயரில் மாணவர் விடுதியை நடத்தி மயிலாடுதுறை வட்டார மக்களுக்கு கல்வி போதித்து வந்தார். அதன் பின்பு பெடரேஷன் அமைப்பில் தொண்டு வீராசாமி, நடுதிட்டு கூத்தரசன் கே.பி.எஸ்.மணி போன்றவர்களுடன் இணைந்து இழி தொழில் ஒழிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து மக்கள் பணியில் இருந்ததால் தான் பணியாற்றிய ஆசிரியர் பணியை துறந்து சென்னை மாகாணத்தின் முதல் சட்டமன்ற தேர்தலில் மயி...

ஆசிரியர் இல்லாமல் சென்டம் அடித்த ஆதிதிராவிட மாணவர்கள்

ஆசிரியர் இல்லாமல் சென்டம் அடித்த ஆதிதிராவிட மாணவர்கள்  அருள் முத்துக்குமரன்  பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மே 6ந் தேதி வெளியானது. தேர்வு முடிவுகளில் தனியார் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி, அரசுப் பள்ளி, மாநகராட்சி பள்ளி, நகராட்சி பள்ளி, சமூக நலத்துறைப்பள்ளி , கள்ளர் சீர்திருத்த பள்ளி என்று மேற்கண்ட பள்ளிகளின் சாதனைகளை பட்டியலிடும் தமிழக அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளை பற்றி எதுவும் பேசுவதில்லை. அதன் முன்னேறிய தேர்ச்சி விகிதம் பற்றி அரசு வெளிபடுத்தவில்லை. ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் 126 மேல்நிலை பள்ளியின் தேர்ச்சி விகிதம் தற்போது 91.15% ஆக இருக்கிறது. இவ்வாறான தேர்ச்சி சதவீதம் 2022ல் 83% ஆகவும், 2023ல் 88% ஆகவும், குறைந்து இருந்தது. கடந்த இரண்டு கல்வியாண்டை விட இந்த கல்வியாண்டில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடி நல பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் கூடியுள்ளது என்பது கவனிக்கத்தக்கது. இதில் இந்த ஆண்டு 26 ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் 100% தேர்ச்சியும் மற்றும் 14 பழங்குடியின பள்ளிகள் 100% சதவீதம் தேர்ச்சி...