செப்டம்பர் மாத நீலம் தலையங்கம் வரலாற்று பிழை
செப்டம்பர் மாத நீலம் தலையங்கம் வரலாற்று பிழை ஒய்வு பெற்ற நீதிபதி ஜனார்த்தனன் தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையம் ஒன்றை உருவாக்கி அதன் பரிந்துரையின் பேரில் தமிழக சட்ட மன்றத்தில் 2009 ஆண்டு அருந்ததியர் சிறப்பு உள் இட ஒதுக்கீட்டுச் சட்டம் தி.மு .க அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இச்சட்டம் மூலம் அரசு கல்வி நிறுவனங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் மாநில அரசின் அனைத்து துறை பணிகளிலும், பட்டியல் சாதிகள் அனுபவித்துவரும் 18 சதவீத இட ஒதுக்கீட்டினைப் பிரித்து மூன்று விழுக்காட்டினை 'அருந்ததியர் சிறப்பு உள் இட ஒதுக்கீடு' என்று அருந்ததியினருக்கு தமிழக அரசு வழங்கியது. இத்தகைய தமிழக அரசின் பிரித்தாளும் சூழ்ச்சியால் பட்டியல் சாதிக்குள் அருந்ததியர் ஒரு பிரிவினராகவும், அருந்ததியர் அல்லாத பிற பட்டியல் சாதிகள் ஒரு பிரிவினராகவும் பிரிக்கப்பட்டனர். பத்திரிக்கை துறையில் சூத்திரர் மற்றும் பார்ப்பனர்களால் நடத்தப்படும் அனைத்து ஊடகங்களும் உள் ஒதுக்கீடு ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படையாக ஆதரித்து எழுதியுள்ளது. முற்போக்கு சாதி இந்துக்கள் ஆதரவு தெரிவித்து தன்னுடைய சமுக நீதியை நிலைநாட்டியுள்ளனர். அந்த வர...