மதுரை பந்தல்குடி நடராஜான் (1939 - 2013)
மதுரை வட்டார பகுதியில் பட்டியல் சமூக ஆளுமைகள் தொடர்ந்து எல்லா காலங்களிலும் செயல்பட்டுள்ளார்கள் என்பதற்கு பந்தல்குடி நடராஜன் ஒரு சான்று மட்டுமே, மதுரை மாநகரில் கோரிப்பாளையம் அருகே இருக்கும் பந்தல்குடி பகுதியில் சுந்தரம்- முத்தாவுடையம்மாள் ஆகியோருக்கு 05 ஆவது பிள்ளையாக 13 ஏப்ரல் 1939 அன்று நடராஜன் பிறந்தார். பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள் 29 டிசம்பர் 1945 அன்று மதுரைக்கு வந்த பொழுது பந்தல்குடி மக்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்டுள்ளார். அன்று எட்வர்ட் மன்றத்தில் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களின் உரையை கேட்கவும் பந்தல்குடிலிருந்து மக்கள் திறளாக கலந்து கொண்டுள்ளனர்.ஆறு வயது சிறுவனாக இருந்த நடராஜன் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களை காணும் வாய்ப்பை பெற்றார். அன்றிலிருந்து தன் இறுதி காலம் வரை கொள்கை மாறாத அம்பேத்திகரியவாதியாக வாழ்ந்தவர். மதுரையில் உள்ள மதுரை யூனியன் கிறிஸ்டியன் உயர் நிவைப்பள்ளியில் 1958 ஆம் ஆண்டு படித்து முடித்தார். 1960 ஆம் ஆண்டு மதுரை அமெரிக்கன் கல்லூரியில் புது முக வகுப்பு (PUC) படித்து முடித்தார். கல்லூரி முடிந்ததும். 1961 ஆம் ஆண்டு மதுரை மாநகராட்சியில் எழுத்தர் பணியில் வேலையில...