தமிழர்களின் குல வழிபாடும் பௌத்தமும்
தமிழர்களின் குல வழிபாடும் பௌத்த மும் ஒரு சமூகத்தின் வரலாற்றை யதார்த்தத்தில் இருந்தே கட்டமைக்க முடியும் அதுவே சரியானதும் ஆகும். மனிதனின் ஒவ்வொரு அசைவையும் அவனது பண்பாடே தீர்மானிக்கிறது. பௌத்த மதத்தில் உருவ வழிபாடு தோன்றுவதற்கு முன்பு புத்த தம்மத்தின் குறியீடான அறச்சக்கரம் மற்றும் அவரின் பாதம் அல்லது பாத பீடிகை வணங்கும் முறை கடைபிடிக்கப்பட்டது. இந்த பண்பாட்டு எச்சத்தை இன்றளவும் நம்முடைய வாழ்வில் பார்க்க முடியும். இன்றைய சடங்கு முறைகள் நமது தொல்குடி மரபின் பண்பாட்டு எச்சமே, பண்பாடு ஒவ்வொரு காலத்திலும் அந்த காலத்துக்கு உட்பட்ட நவீன தன்மையை அடைந்து வேறு வடிவம் எடுத்தாலும் அதன் உள்ளார்ந்த பண்பு மாறுவதே யில்லை, பண்பாட்டு கூறுகள் உருவாதற்கு வலுவான காரணம் இல்லாமல் சாத்தியமில்லை அதனால் பண்பாடு என்பது என்னை பொருத்தவரை இலக்கண முறைப்படி காரணபெயர் என்பதே பொருத்தமாகும். அப்படியான ஒரு தொல் மரபுதான் பாதவழிபாடு என்கிற பண்பாட்டு வழக்கம். பாதத்தை பாதுகாக்கும் மரபு இன்றும் நம்மிடம் தொடர்கிறது. சில நாட்களுக்கு முன்பு என் நண்பரின் உறவினர் இறப்புக்கு சென்றுருந்தேன் .இறந்த பெரியவருக்...