இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்தபோது செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்த ஜேம்ஸ் திரமென்ஹீர் என்பவர் தலித் மக்களுக்கு நிலம் வழங்கிடக்கோரி பிரிட்டன் பாராளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தார். அதனடிப்படையில், பிரிட்டிஸ் அரசாங்கம் தலித் மக்களுக்கு நிலம் வழங்குவதற்காக அரசாணை எண் : 1010 (ம) 1010A Revenue நாள் : 30.09.1892 மற்றும் அரசாணை எண் : 68 Education நாள் : 01.02.1893 ஆகிய இரண்டு அரசாணைகளை பிறப்பித்து, அதன்மூலம் தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிடர் மக்களுக்கு சுமார் 12 இலட்சத்து 61 ஆயிரத்து 13 ஏக்கர் நிலங்களை வழங்கியது. இந்நிலங்களே பஞ்சமி நிலங்கள் அல்லது D.C land என்று அழைக்கப்படுகின்றன. நில நிர்வாக ஆணையர் அலுவலக கடிதம் ந.க.எப்1/20616/2006-ல் 26.07.2006-ம் நாளிட்ட கடிதத்தில் தமிழகத்தில் மொத்தம் 1,26,113.06 ஏக்கர் பஞ்சமி நிலங்கள் மட்டுமே தமிழகத்தில் உள்ளது எனவும், சென்னை, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் பஞ்சமி நிலங்கள் இல்லை எனவும் தமிழக அரசின் நில நிர்வாகத்துறை புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் நில நிர்வாகத்துறை வெ...