Posts

Showing posts from August, 2021

M.C.ராஜா -இறப்பு ஆகஸ்ட் 23

Image
பெருந்தலைவர் M.C.ராஜா இறந்த தேதி ஆகஸ்ட் 20 என்று தவறாக நினைத்து நாம் இதுவரை பதிவிட்டு வந்துள்ளோம். சில ஆவணங்கள் அம்பேத் தவமணி மூலம் எனக்கு கிடைக்கும்போது இறந்த தேதி ஆகஸ்ட் 23 என்று உறுதியாகிறது. 1943 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24 ந்தேதி வெளியான The Indian Express ஆங்கில நாளிதழில் M.C.ராஜா அவர்கள் இறந்தது 23 ந்தேதி என தெளிவாக கூறிவுள்ளது. அதனால்  இனிவரும் காலங்களில் நாம் பேராசிரியர் M.C.ராஜா அவர்களின் நினைவு நாளான ஆகஸ்ட் 23ந்தேதி கொண்டாடுவோம்.

சட்டங்களை மீறும் அரசுகள்

  பட்டியல் மக்கள் 1950ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்துக்களாக கருதப்படவில்லை. இந்திய அரசியல் அமைப்பு சட்டம்  341சரத்தின் படி SC பட்டியலை வரையறுக்க மாநிலமாக இருந்தால் ஆளுநருக்கும், யூனியன் பிரதேசமாக இருந்தால் துணை நிலை ஆளுநருக்கும் அதிகாரம் வழங்கியது. சரத்து 341 ன் படி மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசம் வாரியாக பட்டியல் தயார் செய்து நாடாளுமன்றத்தில் விவாதித்து குடியரசு தலைவர் ஆணை பிறப்பித்தார். இந்த சட்டத்தில் SC பட்டியலில் இருக்க ஒருவர் அதற்கான தகுதியாக அவர் இந்து மதத்தை ஒழுக அல்லது ஓம்ப வேண்டும் என்று வரையறுத்தது. இந்து மதத்தை பின்பற்ற வேண்டும் என்கிற ஒரு வார்த்தை இடம்பெற்றதால்  மதம் மாறிய அனைத்து தலித்தகளும் பட்டியலில் இருந்து வெளியேற வேண்டிய சூழலை இச்சட்டம் உருவாகக்கியது. பாபாசாகிப் அம்பேத்கார் 1956ஆம் ஆண்டு மதம் மாற்றம் அறிவித்து புத்த மதம் மாறியபோது SC பட்டியலில் இருந்தவர்கள்  இந்து மதத்தை பின்பற்றாததால் BC பட்டியலில் இடம்பெற்றனர்.  1990 மத்தியில் V.P. சிங் ஆட்சியின்போது ராம்விலாஸ் பஸ்வான் அவர்களின் அழுத்தத்தால் இந்திய அரசியல் அமைப்பில் திருத்தம் செய்யப்பட்டு ...

மாநாடு

Image
விடுதலை சிறுத்தைகள் கட்சி எண்ணற்ற தொடர் மாநாடுகளை நடத்தியுள்ளது. ஆனாலும் இம்மாநாடுகளின் நோக்கம் என்ன? இதில் கொண்டுவந்த தீர்மானங்கள் என்ன? இம்மாநாடுகளின் நோக்கம் மற்றும் கொண்டுவந்த தீர்மானங்களை  தொடர்ந்து முன்னெடுத்துள்ளதா? எனக்கு தெரிந்து ஒரு பிரச்சனையை பேசி அதனை தொடர்ந்து விவாதமாக்கி அரசுக்கு அழுத்தம் தந்து ஏதேனும் ஒரு கோரிக்கையை வென்றெடுத்துள்ளதாக தெரியவில்லை.  உதாரணமாக 2005 யில் பஞ்சமி நில மீட்பு மாநாடு VCK நடத்தியுள்ளது. அதனை அடுத்து 2021ஆம் ஆண்டில் பஞ்சமி நில மீட்புக்கு ஆணையம் அமைக்க சொல்லி முதல்வரிடம் மனு அளித்துள்ளனர். இந்த 16 ஆண்டுகால இடைவெளி நமக்கு எதை உணர்த்துகிறது. இந்த கால இடைவெளியில் நாம் கற்றுக்கொண்ட பாடம் என்ன? மண்ணுரிமை மாநாடு மற்றும் பஞ்சமி நில மீட்பு மாநாடு இரண்டின் வேறுபாடு என்னவென்று வெகுநாட்களாக தேடியும் எனக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை. இப்படி ஏராளமான மாநாடுகளை சொல்லலாம். கல்விப் புலத்தில் நான் இயங்குவதால் கூறுகிறேன். கல்விக்கென்று முக்கியத்தும் கொடுத்து போராட்டம் நடத்தியதாக நான் அறிந்ததில்லை. மாநாடுகள் பெரும்பாலும் தலித் மக்களின் பிரச்சனையை ஒட்டியே நடைப...

தலித்தல்லாதவர்களுக்கு வீடு கட்டும் திட்டம்.

Image
  பிரதமர் ராஜிவ்காந்தி 1985 ஆம் ஆண்டு இந்திரா நினைவு குடியிருப்பு திட்டம் (IAY) என்ற பக்கா வீடுகள் கட்டும் திட்டம் கொண்டுவந்தார். இக்குடியிருப்பு திட்டத்தின் பயனாளிகளை வரையருக்கும்போது தலித் சமூகத்துக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.  நிதி ஒதுக்கீட்டில் 60% தலித்தகளுக்கும்  சிறுபான்மையினருக்கு 15% என்ற அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் தலித்துகளின் குடிசை வீடுகள் காங்கிரட் வீடுகளாக மாறின, இதற்கு எங்கள் கிராமத்தில் காலனி வீடுகள் என்பார்கள். இந்த சொல்லையே சேரி என்பதற்கு பதிலாக தலித் குடியிருப்புகள் இருக்கும் தெருவை காலனி தெரு என்று கூறினர். இந்திரா நினைவு குடியிருப்பு திட்டம் (IAY) என்ற திட்டத்தை ஒரு சில மாற்றங்களுடன்  பிரதான் மந்திரி அவாஷ் யோஜனா கிராமின் (PMAY-G) என்று பெயர்மாற்றம் செய்து மோடி தலைமையிலான அரசு 2016 ஆம் ஆண்டு அறிவித்தது.  காங்கிரஸ் அரசு கொண்டுவந்த IAY திட்டதைப்போல PMAY-G திட்டத்திலும் தலித்துகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. IAY திட்டத்தில் தலித்கள் ஓரளவு பயனடைந்து இருந்தனர். PMAY-G திட்டத்தில் தலித்தகள் பெரிய அளவில் பயனடைய...

நான் கண்ட கண்ணகி

Image
 https://www.aransei.com/opinion/article/kannaki-murugesan-memorial-day/

அநீதியை எதிர்ப்பதுதான் அறம்

 https://www.aransei.com/news/virtue-is-to-oppose-injustice-kannaki-murugesan-a-conversation-with-lawyer-rathinam/

தலித் வழக்கறிஞர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கு

 https://www.facebook.com/meiarivu/posts/527553491921426?__cft__[0]=AZVoXj50sKJd3_mZxATSQV9tMY1d5hgIcZjHNYcrUpUn9ad1vd0SGxxBGazJqygIVWXZE0FhHAQEzbQygoZF5hQpieYNMV_Og-wshHLdxdEfQ7py2eo0i8e4va9vsG5FCfbUtEg3WJJrIWeU87ku0deJ3YqaW-Di7_udzAu7-Ere2g&__tn__=%2CO%2CP-R

SC, ST ஆணைய பொறுப்புகளை உடனே நிரப்புக

Image
 https://www.aransei.com/opinion/article/sc-st-commission/

மதுரையில் மீட்கப்பட்ட பஞ்சமி நிலம்

Image
 https://www.aransei.com/opinion/article/panchami-land-reclaimed-in-madurai/

பெடரேஷன் கட்சியின் தொடக்கம்

 https://www.aransei.com/opinion/article/a-journey-to-the-memory-of-history-the-federation-party-and-its-function/

வெளியேற்றப்படும் சென்னை மக்கள்-வரலாற்று படிப்பினை என்ன?

Image
 https://www.aransei.com/news/expelled-chennai-people-what-is-the-lesson-of-history/

திசை திருப்பும் திட்டங்கள்

Image
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் திட்டம் தலித் இளைஞர்கள்களை திசைதிருப்பும் திட்டம். கடந்த கால வரலாறுகளை பார்க்கும்போது  தலித் மக்கள் போராட்டங்கள் மூலம் விழிப்புணர்வு அடைந்து சுய மரியாதையுடன் பேசி, செயல்பட்டு வரும்போது அதற்கு நேர் எதிரான ஒரு நடவடிக்கை எடுத்து தலித் மக்களை திசைதிருப்பி நடந்த ஆக்கப்பூர்வமான செயல்களை மடைமாற்றுவது அரசின் நிலைப்பாடக இதுவரை இருந்துள்ளது. உதாரணமாக விடுதலை சிறுத்தைகளின் தொடக்க கால போராட்டங்களில் ஈடுபட்டவர்களை குண்டர் சட்டத்தில் கைதி செய்துகொண்டே அன்றைய முதல்வர் கருணாநிதி 1998 ஆம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் விருதை உருவாக்கி முதன் முதலாக அய்யா L. இளையப்பெருமாள் அவர்களுக்கு அறிவித்தது. ஆனால் விருதுபெற்ற அய்யா L.இளையப்பெருமாள் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அரசின் உள்நோக்கத்தை விமர்சித்து எங்கள் மக்கள் மீது ஏவும் அடக்குமுறையை உடனே அரசு நிறுத்த வேண்டும் என்று கூறினார். இதேபோன்று மருத்துவர் கிருஷ்ணசாமி அவர்கள் வெள்ளை அறிக்கை பெற்று அரசு துறையில் பின்னடைவு காலி பணியிடங்களை நிரப்ப கடுமையான போராட்டத்தை முன்னெடுத்து அரசுக்கு அழுத்தம் தந்த தருணத்தில் அருந்ததியர்களுக்கு உள் இ...

நீலதுண்டு கூத்தாநல்லூர் K. கிருஷ்ணமூர்த்தி

Image
  தலித் மக்களின் ஆக்கபூர்வமான போராட்டங்களை கையில் எடுத்து சாதித்துகாட்டிய பஞ்சமி நில மீட்பு போராளி அய்யா நீலதுண்டு கூத்தாநல்லூர் K. கிருஷ்ணமூர்த்தி அவர்களை நண்பர் முத்து பிரதிபன் சாக்கியா மற்றும் டேவிட்டுடன் சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் எனக்கு ஏற்படுத்தியது. 1938யில் பிறந்து மருத்துவ உதவியாளராக தான் பணியாற்றிய அரசு பணியை துறந்து தன் இளமைக்காலம் முதல் மக்கள் பணியில் தற்போது வரை ஈடுபட்டு வரும் அய்யா அவர்கள் தன்னுடைய  போராட்ட அனுபவங்களை 84 வயதிலும் உற்சாகமாக சீர்காழி பனங்காட்டுத்தெருவில் இருக்கும் வீட்டில் எங்களுடன்  பகிர்ந்துகொண்டார்.  1967-70 காலகட்டத்தில் கும்பகோணம் அரசு கல்லூரியில்  படிக்கும்போதே நண்பர்களுடன் இணைந்து அம்பேத்கர் மன்றம் என்ற பெயரில் மாணவர் அமைப்பு தொடங்கி டாக்டர் அம்பேத்கர் படத்தை பல இடர்பாடுகளின் மத்தியில் கல்லுரியில் இடம்பெற செய்தார். கல்லூரி படிப்பை முடித்த பிறகு தன் சொந்த கிராமத்து குழந்தைகளுக்கு இரவு பள்ளியை நடத்தினார். கல்லூரியில் நடத்தி வந்த அம்பேத்கர் மன்றத்தை இளைஞர்களுடன் இணைந்து விரிவுபடுத்த திருவாலி, கோட்டகம், புளி...