மீளும் பௌத்தம்-சித்தர் மரபு பௌத்த மரபே என்னுடைய பள்ளி மற்றும் கல்லூரி வாழ்க்கை பொறையார் (பிறையாரு) நகரிலே அமைந்தது. ஓய்வு நேரத்தை அமைதியாக கழிக்கும் இடமாக பொறையார் புறநகர் பகுதியில் அமைந்துள்ள பாப்பையா மடம் எனக்கு அமைந்தது. நாகப்பட்டினம் மாவட்டம், பொறையார் புதிய பேருந்து நிலையம் அருகில் நடந்து செல்லும் தொலைவில் பௌத்த அடையாளங்களை தாங்கி பாப்பையா மடம் இருக்கிறது. பொறையாரின் புறநகர் பகுதியான கோட்டைமேடு என்ற பகுதியில் ஶ்ரீ பாப்பையா சித்தர் ஜீவ சமாதி மடம் அமைந்துள்ளது. மடத்தின் வாசலின் இருபக்க சுவரிலும் புத்தம் சரணம் என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. சித்தர் மடத்துக்கும் பௌத்ததுக்கும் உள்ள தொடர்பை நமக்கு துவக்கத்திலேயே காட்டுகிறது. பாப்பையா மடம் இலங்கை தாய்லாந்து மற்றும் திபெத் போன்ற நாடுகளின் பௌத்த விகார் அமைப்புடன் ஒத்து மடத்தின் கட்டிடக்கலை அமைந்துள்ளது. இலங்கை புத்த அமைப்பின் உதவியால் மாமல்லபுரத்தில் செய்து கொண்டுவரப்பட்ட புத்தரின் சிலையின் உயரம் பீடத்துடன் சேர்த்து சுமார் (5+12) 17 அடி உயரத்தில் அமைந்துள்ளது. சீவர ஆடையில் நின்ற நிலையில் புத்தரின் சிலையில் ...
அறநிலையதுறையில் சாதியம் திமுக அரசு பருவமழை காலத்தில் வெள்ள நிவாரணப் பணிகளில் காட்டும் ஆர்வத்தை விட மற்ற அதிகாரமிக்க பல பொறுப்புகளை சத்தமில்லாமல் நியமித்து வருகிறது. திமுக அரசு இப்படியான அதிகாரமுடைய பொறுப்புகளை நியமிப்பதன் மூலம் சாதியமைப்பை கட்டுடையாமல் பாதுகாக்கும் பணியை மேற்கொள்கிறது. குறிப்பாக அரசு வழக்கறிஞர்கள் நியமனம் மற்றும் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் அறங்காவலர்கள் நியமிப்பது போன்றவற்றை குறிப்பிடலாம். திமுக அரசு இரண்டு நிலைப்பாட்டை மையமாக வைத்துகொண்டு சமூக நீதி என்ற பெயரில் அரசியல் செய்கிறது. ஒன்று ஏற்கனவே இருக்கும் சாதியமைப்பை வன்கொடுமை மற்றும் படுகொலை நடைபெறும் போது அதை கண்டு கொள்ளாமல் அமைதியாக இருந்து சூத்திர விசுவாசத்தை திமுக காட்டுகிறது. மற்றொன்று திமுக அரசு முதலமைச்சருக்கு கொடுக்கும் முக்கியத்துவத்துக்கு அடுத்தபடியாக இந்து அறநிலையத்துறை மட்டுமே சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்ற பிம்பத்தை ஊடகங்கள் மூலம் மக்கள் மத்தியில் கட்டமைத்து வருகிறது இதிலும் கவனமாக ஸ்டாலின் அரசு மதப்பற்றை கடந்த சூத்...
விடுதலை சிறுத்தைகள் கட்சி எண்ணற்ற தொடர் மாநாடுகளை நடத்தியுள்ளது. ஆனாலும் இம்மாநாடுகளின் நோக்கம் என்ன? இதில் கொண்டுவந்த தீர்மானங்கள் என்ன? இம்மாநாடுகளின் நோக்கம் மற்றும் கொண்டுவந்த தீர்மானங்களை தொடர்ந்து முன்னெடுத்துள்ளதா? எனக்கு தெரிந்து ஒரு பிரச்சனையை பேசி அதனை தொடர்ந்து விவாதமாக்கி அரசுக்கு அழுத்தம் தந்து ஏதேனும் ஒரு கோரிக்கையை வென்றெடுத்துள்ளதாக தெரியவில்லை. உதாரணமாக 2005 யில் பஞ்சமி நில மீட்பு மாநாடு VCK நடத்தியுள்ளது. அதனை அடுத்து 2021ஆம் ஆண்டில் பஞ்சமி நில மீட்புக்கு ஆணையம் அமைக்க சொல்லி முதல்வரிடம் மனு அளித்துள்ளனர். இந்த 16 ஆண்டுகால இடைவெளி நமக்கு எதை உணர்த்துகிறது. இந்த கால இடைவெளியில் நாம் கற்றுக்கொண்ட பாடம் என்ன? மண்ணுரிமை மாநாடு மற்றும் பஞ்சமி நில மீட்பு மாநாடு இரண்டின் வேறுபாடு என்னவென்று வெகுநாட்களாக தேடியும் எனக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை. இப்படி ஏராளமான மாநாடுகளை சொல்லலாம். கல்விப் புலத்தில் நான் இயங்குவதால் கூறுகிறேன். கல்விக்கென்று முக்கியத்தும் கொடுத்து போராட்டம் நடத்தியதாக நான் அறிந்ததில்லை. மாநாடுகள் பெரும்பாலும் தலித் மக்களின் பிரச்சனையை ஒட்டியே நடைப...
Comments
Post a Comment