24 கிராம கமிட்டி தலைவர் கே.ஏ.கிருஷ்ணமூர்த்தி
24 கிராம கமிட்டி தலைவர் கே.ஏ.கிருஷ்ணமூர்த்தி மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகில் வயல்வெளி என்ற கிராமத்தில் அருணாசலம் ஜெகதாம்பாள் தம்பதியருக்கு 14 அக்டோபர் 1949 அன்று கிருஷ்ணமூர்த்தி பிறந்தார். சிறுவயது முதல் சமூக பிரச்சனையை துணிந்து பேசுவதிலும், ஆன்மிகத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார். கிருஷ்ணமூர்த்தி தனது பள்ளிப் படிப்பை சீர்காழியில் உள்ள சபாநாயகர் முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியில் படித்தார். பள்ளியின் விடுதியில் தங்கி படிக்கும்போது கண்காணிப்பாளரின் தவறை தட்டிகேட்டதால் கே.பி.எஸ்.மணியின் பாராட்டை பெற்றார். தன்னுடைய அரசியல் வாழ்க்கையை பள்ளி பருவதில்லையே தொடங்கிய கே.ஏ.கே 24 கிராம கமிட்டி தலைவர், துணை ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஆதிதிராவிடர் நல மாநிலக்குழு உறுப்பினர் என்று பல தளங்களில் பணியாற்றியுள்ளார். 1970 காலகட்டத்தில் கடுமையான சாதிய பிரச்சனைகள் பூம்புகார் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தலித் மக்களுக்கு நடந்தது. குறிப்பாக கே.ஏ.கே கிராமமான வயல்வெளியில் செத்த மாட்டை தூக்க மாட்டோம் என்கிற இழி தொழில் மறுப்பு சம்பவம் இவரை ...