Posts

Showing posts from October, 2021

முற்போக்கு எனும் பிற்போக்கு

Image
முற்போக்கு எனும் பிற்போக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் தற்போது இல்லம் தேடி கல்வி என்னும் திட்டத்தை பள்ளி மாணவர்களுக்கு மாலை நேரங்களில் இரண்டு மணி நேரம் வகுப்பு எடுக்கும் திட்டமாக  அறிமுகப்படுத்தியுள்ளார். இல்லம் தேடி கல்வி திட்டம் புதிய கல்வி கொள்கையில் இடம்பெற்றுள்ளதை சுட்டிக்காட்டி இது RSS யின் திட்டம் என்றும்  விமர்சனம் எழுந்து வரும் சூழலில் சமீப கால நிகழ்வுகளுடன் ஒப்பீட்டு பார்ப்பது மிகவும் அவசியம். கட்டாய கல்வி திட்டம் கொண்டுவந்தபோது இத்திட்டதால்  பள்ளியில் சேரும் குழந்தைகளின் எண்ணிக்கை கூடும் என்றும் மேலும் இடைநிற்றலை குறைக்கவும் இத்திட்டம் முக்கிய பங்கு வகிக்கும் என்று காங்கிரசு அரசு கூறியது. ஆனால் தற்போது இரண்டும் குறையவில்லை அதற்கு முக்கிய காரணம் தரமான கல்வியை இத்திட்டம் உறுதிப்படுத்தவில்லை. இத்திட்டத்தை முடமாக்கியதில் ஆசிரியர் பங்கு அளப்பரியது. ஒரு வகுப்பை கற்றல் சார்ந்து வழிநடத்தாமல்  இருப்பதில் நம் அரசு ஆசிரியர்களுக்கு நிகர் யாருமில்லை. அதேபோன்று திறமையான ஆசிரியர்களை பயன்படுத்துவதில் அரசுக்கு இருக்கும் தயக்கமே எல்லாவற்றுக்கும் முக்கிய காரணம் ஆகும். மாணவர்களி...

காரணை பஞ்சமி நில போராட்டம் (அக்-7)

Image
 காரணை பஞ்சமி நில போராட்டம்  (அக்-7) காரணை பஞ்சமி நில போராட்டம்  (அக்-7) போடப்பட்ட தூண்டறிக்கையை எடுத்துக்கொண்டு 7ந் தேதி சாம் நிறுவனத்துக்கு கொண்டு சென்றேன். அப்போது தீபன் சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டதாக தகவல் வந்தது. சாம் நிறுவனத்தின் பொறுப்பாளர் மார்ட்டினை கைது செய்ய எந்த நேரத்திலும் போலிஸ் வரலாம் என்ற பதட்டம் நிலவி கொண்டுயிருந்தது.  நான் தூண்டறிக்கையை கொடுத்து விட்டு காஞ்சீவரம் செல்வதற்கு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தேன். அப்போது என்னிடம் சில போலீசார் விசாரித்தனர். அவர்களிடம் ஒன்றிரண்டு தூண்டறிக்கையை கொடுத்து விட்டு நான் பேருந்து ஏறி உடனடியாக காஞ்சீவரம் வந்தடைந்தேன். எனக்கு முன்னதாகவே அங்கு மார்ட்டின் வந்திருந்தார். அங்கு தோழர்களுடன் கலந்து பேசி அடுத்தகட்டமாக சிலை உடைப்பை கண்டித்து செங்கல்பட்டில் ஆர்ப்பாட்டம் நடத்துவதனெ முடிவு செய்யப்பட்டது. பாசறை அ. செல்வராஜ் எழுதிய "கிளர்ச்சி செய்" என்ற நூலிலிருந்து 

காரணை பஞ்சமி நில போராட்டம் (அக்-6)

Image
மாலை 3 மணி அளவில் காவல்துறை அதிகாரிகள் சிலையை உடைத்து காவல் நிலையத்துக்கு எடுத்து சென்றதாக இரவு 7 மணிக்கு எங்களுக்கு தகவல் தெரிந்தது. இரவோடு இரவாக அடுத்தகட்ட போராட்டத்தை முடிவு செய்தோம். அதன் முதல் வேலையாக தூண்டறிக்கை போஸ்டர் தயார் செய்வதற்கு  இரவு 11 மணிக்கு காஞ்சிபுரம் டோல்கேட் பகுதியில் உள்ள அன்பு அச்சகம் சென்றோம். காரணை, மானாமதி மற்றும் ஏழு கிராமங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கூடி பஞ்சமி நில உரிமை பாதுகாப்பு குழு என்று அமைத்திருந்தனர். அந்தக் குழு சார்பில் ஒரு சுவரொட்டி ஒட்டப்பட்டது. அதில் "எங்களுக்கு சொந்தமான நிலத்தில் நாங்கள் அமைத்த பாபாசாகிப் அம்பேத்கர் சிலையை உடைக்கத் தூண்டிய குற்றவாளி பெருமாள்சாமி ஐஜியையும் உடைத்த போலிஷ் ரவுடிகளையும் உடனே கைது செய் " என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தது. இதற்கிடையில் அக்டோபர் மாதம் 6ந் தேதி இரவு பஞ்சமி நில உரிமையாளரான தீபன் சக்ரவர்த்தி உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப் படுகின்றனர். பாசறை அ. செல்வராஜ் எழுதிய "கிளர்ச்சி செய்" என்ற நூலிலிருந்து 

காரணை பஞ்சமி நில போராட்டம் (அக்-5)

Image
  பஞ்சமி நிலத்தில் சிலை வைப்பதற்கான அடிக்கல் போட குழியை தோண்ட தொடங்கினோம்.  முதன் முதலில் கடப்பாரையை வைத்து மு.க.மாயன் குழியை தோண்ட அதிலிருந்து மண்ணை நான் (பாசறை அ. செல்வராஜ் ) அள்ளிப்போட்டேன். சாம் நிறுவனத்தை  சேர்ந்த ஜான்தாமஷ், துரை, கண்ணியம்மாள், கரும்பு வெட்டும் தொழிலாளர் சங்கத் தலைவர் கருணாகரன் அனைவரும் சிலை வைப்பதற்கான வேலையை முடிக்கும்போது 5 ம் தேதி காலை 5 மணியாயிற்று. காலை 8 மணிக்கு பாபாசாகிப் அம்பேத்கர் சிலையை பௌத்த பெரியவர் மு.சுந்தரராசனார் அவர்கள் திறப்பதாக தூண்டறிக்கை போடப்பட்டிருந்தோம். ஆனாலும் அவர் வருவதற்கு வாய்ப்பில்லாத சூழலில் நானே சிலையை திறந்து வைத்தேன். சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த உண்மையான நில உரிமையாளர்களான செடியூல்டு வகுப்பு மக்கள் 1000 கணக்கில் கலந்துகொண்டனர். 11 மணிக்கு நிகழ்ச்சி முடிந்து அனைவரும் வீடு திரும்பினர். பாசறை அ. செல்வராஜ் எழுதிய "கிளர்ச்சி செய்" என்ற நூலிலிருந்து 

காரணை பஞ்சமி நில போராட்டம் தொடக்கம் (அக்-4)

Image
  காரணை பஞ்சமி நில போராட்டம் தொடக்கம் (அக்-4) 1933 ஆம் ஆண்டு ட்ரெமென்  ஹெரே அரசுக்கு பரிந்துரை செய்து சுமார் 42 ஆண்டுகளுக்குப் பிறகுதான் மாமல்லபுரம் அருகே காரணை கிராமத்திற்கு ஒட்டியுள்ள கல்லமாநகர், மனமை, குழப்பந்தாதண்டலம், வளவந்தாங்கள், மானாமதி, பங்காருபேட்டை ஆகிய 7 கிராமங்களை சேர்ந்த செடியூல்டு வகுப்பு கூலி விவசாயிகளை திரட்டி காலணா கூலி கொடுத்து காடுகளை திருத்தி, இவ்வாறு கழனியாக்க பட்ட நிலங்களை ஆளுக்கு சுமார் 1 ஏக்கர் அளவில் பிரிட்டிஷ் அரசு பிரித்து கொடுத்தது. சர்வே எண் : 91 முதல் 207 வரை உள்ள காரணை புஞ்சை தரிசு நிலம் சுமார் 633 ஏக்கர்.(செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆணை எண்: 5560 தேதி: 19-11-1933 ) செங்கல்பட்டு மாவட்டம் (தற்போது காஞ்சீவரம் மாவட்டம்) காரணை கிராமத்தில் 633 ஏக்கர் பஞ்சமி நிலம் இருக்கிறது. ஆனால் அந்த நிலங்கள் ஆதிதிராவிடர்களிடம் இல்லை. 1994 அக்டோபார் 4 ஆம் தேதி காரணையில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்கின்ற போராட்டத்தின் முதல் அடியாக செடியூல்டு வகுப்பு மக்களுக்கு சட்டப்படி சொந்தமான பஞ்சமி நிலத்தில் பாபாசாகிப் அம்பேத்கர் சிலையை நிறுவ முடிவு செய்யப்பட்டது. பாசறை அ. செ...