காரணை பஞ்சமி நில போராட்டம் (அக்-7)
காரணை பஞ்சமி நில போராட்டம் (அக்-7)
காரணை பஞ்சமி நில போராட்டம் (அக்-7)போடப்பட்ட தூண்டறிக்கையை எடுத்துக்கொண்டு 7ந் தேதி சாம் நிறுவனத்துக்கு கொண்டு சென்றேன். அப்போது தீபன் சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டதாக தகவல் வந்தது. சாம் நிறுவனத்தின் பொறுப்பாளர் மார்ட்டினை கைது செய்ய எந்த நேரத்திலும் போலிஸ் வரலாம் என்ற பதட்டம் நிலவி கொண்டுயிருந்தது.
நான் தூண்டறிக்கையை கொடுத்து விட்டு காஞ்சீவரம் செல்வதற்கு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தேன். அப்போது என்னிடம் சில போலீசார் விசாரித்தனர். அவர்களிடம் ஒன்றிரண்டு தூண்டறிக்கையை கொடுத்து விட்டு நான் பேருந்து ஏறி உடனடியாக காஞ்சீவரம் வந்தடைந்தேன்.
எனக்கு முன்னதாகவே அங்கு மார்ட்டின் வந்திருந்தார். அங்கு தோழர்களுடன் கலந்து பேசி அடுத்தகட்டமாக சிலை உடைப்பை கண்டித்து செங்கல்பட்டில் ஆர்ப்பாட்டம் நடத்துவதனெ முடிவு செய்யப்பட்டது.
பாசறை அ. செல்வராஜ் எழுதிய "கிளர்ச்சி செய்" என்ற நூலிலிருந்து
Comments
Post a Comment