சித்தர் மரபு பௌத்த மரபே
மீளும் பௌத்தம்-சித்தர் மரபு பௌத்த மரபே என்னுடைய பள்ளி மற்றும் கல்லூரி வாழ்க்கை பொறையார் (பிறையாரு) நகரிலே அமைந்தது. ஓய்வு நேரத்தை அமைதியாக கழிக்கும் இடமாக பொறையார் புறநகர் பகுதியில் அமைந்துள்ள பாப்பையா மடம் எனக்கு அமைந்தது. நாகப்பட்டினம் மாவட்டம், பொறையார் புதிய பேருந்து நிலையம் அருகில் நடந்து செல்லும் தொலைவில் பௌத்த அடையாளங்களை தாங்கி பாப்பையா மடம் இருக்கிறது. பொறையாரின் புறநகர் பகுதியான கோட்டைமேடு என்ற பகுதியில் ஶ்ரீ பாப்பையா சித்தர் ஜீவ சமாதி மடம் அமைந்துள்ளது. மடத்தின் வாசலின் இருபக்க சுவரிலும் புத்தம் சரணம் என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. சித்தர் மடத்துக்கும் பௌத்ததுக்கும் உள்ள தொடர்பை நமக்கு துவக்கத்திலேயே காட்டுகிறது. பாப்பையா மடம் இலங்கை தாய்லாந்து மற்றும் திபெத் போன்ற நாடுகளின் பௌத்த விகார் அமைப்புடன் ஒத்து மடத்தின் கட்டிடக்கலை அமைந்துள்ளது. இலங்கை புத்த அமைப்பின் உதவியால் மாமல்லபுரத்தில் செய்து கொண்டுவரப்பட்ட புத்தரின் சிலையின் உயரம் பீடத்துடன் சேர்த்து சுமார் (5+12) 17 அடி உயரத்தில் அமைந்துள்ளது. சீவர ஆடையில் நின்ற நிலையில் புத்தரின் சிலையில் ...
Comments
Post a Comment